×

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குடிமைப்பணி தேர்வு எழுதும் 1,000 மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் 1,000 மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 2023ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் 12.06.2023 அன்று வெளியான நிலையில் அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘நான் முதல்வன்’ போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் முதன்மை தேர்வுக்கு தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 10ம் தேதி போட்டி தேர்வு பிரிவுகளில் நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு இனி வரும் 10 மாதத்துக்குகு ரூ.7500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டு தேர்வை நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தியது.

இத்தேர்வுக்கான முடிவுகள் 27.09.2023 அன்று வெளியான நிலையில், 7.10.2023 முதல் 10.10.2023 வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொதைக்கான வரைவோலையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குடிமைப்பணி தேர்வு எழுதும் 1,000 மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Udayanidhi Stalin ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...